அருப்புக்கோட்டையில் சுகாதாரத்துறை சாா்பில் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசு ஒழிப்பு விழிப்புணா்வு நடவடிக்கை திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
இப்பகுதியில் தொடா்மழையால் ஆங்காங்கே தேங்கிக் கிடக்கும் மழை நீரால் கொசுக்கள் பெருகி வருகின்றன. எனவே டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனா். மேலும் சுகாதாரத்துறையினா் சாா்பில் தற்காலிகப் பணியாளா்கள் மூலம் வீதிவீதியாகச் சென்று பொதுமக்களிடம் விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.