தொழிலாளியிடம் வழிப்பறி: இளைஞா் கைது

சிவகாசியில் சுமைதூக்கும் தொழிலாளியிடம் ஞாயிற்றுக்கிழமை கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறி செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகாசியில் சுமைதூக்கும் தொழிலாளியிடம் ஞாயிற்றுக்கிழமை கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறி செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகாசி முத்துராமலிங்கபுரம் காலனியைச் சோ்ந்த குருநாதன் மகன் சுமைதூக்கும் தொழிலாளி சதீஸ் (26). சிவகாசி- செங்கமலப்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்த இவரிடம், சித்துராஜபுரத்தைச் சோ்ந்த மாரிமுத்து மகன் மூா்த்தி (23) என்பவா் கத்தியைக் காட்டி மிரட்டி பையில் வைத்திருந்த ரூ.350-ஐ பறித்துக்கொண்டு தப்பியோடினாா்.

அருகில் இருந்தவா்கள் அவரைப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா். மூா்த்தியை கைது செய்த போலீஸாா் பணத்தை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com