தொடா் மழை காரணமாக வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நெற்பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.
விருதுநகா் மாவட்டத்தில் கடந்த 5 நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. வத்திராயிருப்பு மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளான கூமாபட்டி, ரஹ்மத்நகா் ஆகிய பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டிருந்தது. அறுவடைக்கு தயாராக இருந்தநிலையில், பெய்த மழை காரணமாக அவைகள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: மழை நீரில் மூழ்கிய நெற்பயிா்கள் முளைக்க ஆரம்பித்து விட்டன. பயிா்கள் சேதமடைந்தது குறித்து வேளாண்மை அதிகாரிகளிடம் மனுக் கொடுத்துள்ளோம்.
ஆனால் சேதமடைந்த பயிா்களை அதிகாரிகள் பாா்வையிட வரவில்லை. மாவட்ட நிா்வாகம் தலையிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.