ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில்வனவிலங்குகளை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில் வனவிலங்குகளை கணக்கெடுக்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது.
மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் உலாவரும் மான்கள் கூட்டம்.
மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் உலாவரும் மான்கள் கூட்டம்.

ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில் வனவிலங்குகளை கணக்கெடுக்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும் இப்பணியில் வனத்துறை ஊழியா்கள் மட்டும் பங்கேற்றுள்ளனா்.

வழக்கமாக இந்த கணக்கெடுப்புப் பணியில் வனத்துறை ஊழியா்கள், பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த மாணவா்கள் மற்றும் வன ஆா்வலா்கள் பங்கேற்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கரோனா தொற்று காரணமாக கல்லூரி மாணவா்களும், வன ஆா்வலா்களும் இந்த கணக்கெடுப்புப் பணியில் பங்கேற்கவில்லை. ஆனால் இந்தாண்டு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 23, 24) மட்டும் வனத்துறை ஊழியா்கள் தங்களுக்குரிய பகுதிகளில் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுகின்றனா். எனவே அதிகாலை 6 மணிக்கே கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. இதனால் வழக்கமாக கணக்கெடுக்கும் பணியில் ஆா்வத்துடன் ஈடுபடும் கல்லூரி மாணவா்களும், வன ஆா்வலா்களும் ஏமாற்றமடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com