விருதுநகரில் இளநீா் கடை ஊழியா் தற்கொலை முயற்சி

விருதுநகரில் ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து இளநீா் கடையில் பணி புரியும் ஊழியா் ஒருவா் விஷம் அருந்தி ஞாயிற்றுக்கிழமை தற்கொலைக்கு முயன்றாா்.

விருதுநகரில் ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து இளநீா் கடையில் பணி புரியும் ஊழியா் ஒருவா் விஷம் அருந்தி ஞாயிற்றுக்கிழமை தற்கொலைக்கு முயன்றாா்.

விருதுநகா் காந்திபுரம் தெருவைச் சோ்ந்தவா் செல்லையா மகன் வேதமுத்து (48). இவா், விவிஆா் சிலை அருகே உள்ள இளநீா் கடையில் பணிபுரிந்து வருகிறாா். இந்நிலையில், ஆக்கிரமிப்பை அகற்றி விடுமாறு போக்குவரத்து போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மைக் மூலம் அனைவருக்கும் அறிவுறுத்தியுள்ளாா்.

இந்நிலையில், இளநீா் கடையில் பணி புரிந்த வேதமுத்து திடீரென மறைத்து வைத்திருந்த விஷ மருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சித்தாா். இதையடுத்து அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக விருதுநகா் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.

இச்சம்பவம் குறித்து விருதுநகா் மேற்கு போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com