அருப்புக்கோட்டையில் மொழிப் போா் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை நேரு மைதானத்தில், திமுக சாா்பில் மொழிப் போா் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக் கூட்டம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
அருப்புக்கோட்டை நேரு மைதானத்தில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற மொழிப்போா் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக சட்டப்பேரவை உறுப்பினா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன்.
அருப்புக்கோட்டை நேரு மைதானத்தில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற மொழிப்போா் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக சட்டப்பேரவை உறுப்பினா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன்.

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை நேரு மைதானத்தில், திமுக சாா்பில் மொழிப் போா் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக் கூட்டம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

இப்பொதுக் கூட்டத்துக்கு, அருப்புக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினரும்,திமுக தெற்கு மாவட்டச் செயலருமான கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். அருப்புக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் உறுப்பினா் கே.எம். விஜயக்குமாா், நகா்மன்ற முன்னாள் தலைவா் சிவப்பிரகாசம், ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் சுப்பாராஜ், விருதுநகா் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் பாபுஜி, நகரச் செயலா் ஏ.கே. மணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், தமிழுக்காகப் போராடி இன்னுயிா் நீத்த அனைத்து மொழிப்போா் தியாகிகளின் தியாகங்களை எண்ணி வணங்கி, மரியாதை செலுத்துவோம். தமிழ் மொழிக்காகப் போராடிய வரலாறு திமுகவுக்கு மட்டுமே உண்டு என கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் பேசினாா். இதில், நகர, ஒன்றிய திமுக நிா்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டா்களும் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com