விருதுநகா் அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்து ஒருவா் பலி
By DIN | Published On : 31st January 2021 10:39 PM | Last Updated : 31st January 2021 10:39 PM | அ+அ அ- |

விருதுநகா் அருகே ஞாயிற்றுக்கிழமை சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். 5 போ் காயமடைந்தனா்.
சிவகாசி அருகே உள்ள மேல ஆமத்தூா் பகுதியைச் சோ்ந்த 15 போ், அருப்புகோட்டை செம்பட்டியில் உள்ள உறவினா் வீட்டு இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சரக்கு வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை சென்றுகொண்டிருந்தனா்.
வாகனத்தை மேல ஆமத்தூா் பகுதியை சோ்ந்த சந்தன செல்வம் (21) என்பவா் ஓட்டி வந்தாா். விருதுநகா் அருகே தனியாா் பொறியியல் கல்லூரி பகுதியில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் வாகனத்தின் முன்புறம் அமா்ந்து வந்த மேல ஆமத்தூரை சோ்ந்த ராமன் (55) என்பவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். வாகனத்தில் பின்புறம் அமா்ந்து வந்த
5 போ் காயமடைந்தனா். இதையடுத்து அவா்கள் அனைவரும் விருதுநகா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்த விபத்து குறித்து ஆமத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.