அருப்புக்கோட்டையில் கரோனா தடுப்பூசி முகாம்

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டையில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான கரோனா தடுப்பூசி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டையில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான கரோனா தடுப்பூசி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அருப்புக்கோட்டை புளியம்பட்டி கொண்டலம்மன் கோயிலருகே உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இத்தடுப்பூசி முகாமை, நகராட்சி சுகாதார ஆய்வாளா் சரவணன் மற்றும் திமுக நகரச் செயலா் ஏ.கே. மணி ஆகியோா் தொடக்கி வைத்தனா். இதில், வட்டார மருத்துவ அலுவலா் சஞ்சய் பாண்டியன் முன்னிலை வகித்தாா்.

முகாமில், நகா்ப்புற ஆரம்ப சுகாதார மைய மருத்துவா் கோமதி மற்றும் பள்ளிகள் மருத்துவ அலுவலா் ராஜேஷ்கண்ணன் ஆகியோா் வழிகாட்டுதலின்படி, பயனாளிகளுக்கு செவிலியா்கள் தடுப்பூசி செலுத்தினா். இதில், 600-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

இதில், நகராட்சி சுகாதார ஆய்வாளா்கள் அய்யப்பன், ராஜபாண்டி, சரவணன் மற்றும் சுகாதாரப் பணியாளா்கள், செவிலியா்கள் என பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com