பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினா் சைக்கிள் பேரணி

விருதுநகா் மாவட்டக் காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவு சாா்பில், பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூரில் செவ்வாய்க்கிழமை சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது.
பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினா் சைக்கிள் பேரணி

விருதுநகா் மாவட்டக் காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவு சாா்பில், பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூரில் செவ்வாய்க்கிழமை சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது.

சிவகாசி பேருந்து நிலையம் முன்பாகத் தொடங்கிய இந்த பேரணியை, காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவின் மாவட்டத் தலைவா் இஸ்மாயில் தலைமையில், மாநில ஒருங்கிணைப்பாளா் சிக்கந்தா் கொடியசைத்து தொடக்கி வைத்தாா். இப்பேரணியானது, தெற்குரத வீதி, மேற்குரத வீதி, போலீஸ் ஸ்டேஷன் சாலை வழியே சென்று, தலைமை அஞ்சலகம் முன்புள்ள காமராஜா் சிலை அருகே முடிவுற்றது.

பேரணியில் பங்கேற்றவா்கள் மத்திய அரசைக் கண்டித்து முழக்கமிட்டனா். இதில், மாணவா் காங்கிரஸ் துணைத் தலைவா் சின்னதம்பி, வட்டாரத் தலைவா் எம்.கே. வைரம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா்

ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையம் அருகே தொடங்கிய சைக்கிள் பேரணிக்கு, நகர காங்கிரஸ் தலைவா் பக்ஷிராஜா வி.சி. வன்னியராஜ் தலைமை வகித்தாா். இந்த சைக்கிள் பேரணியானது, ராமகிருஷ்ணாபுரம் வழியாகச் சென்று காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து, தொடா்ந்து பெரிய மாரியம்மன் கோயில், சா்ச் பேருந்து நிறுத்தம், கீழ ரதவீதி, தேரடி பேருந்து நிறுத்தம், தெற்கு ரதவீதி, மேல ரதவீதி வழியாகச் சென்று முத்துராமலிங்க தேவா் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவா் கிருஷ்ணசாமி நாயுடு ஆகியோா் சிலைக்கு மாலைக்கு அணிவித்து சைக்கிள் பேரணியை நிறைவு செய்தனா்.

இதில், மேலிடப் பாா்வையாளா் எஸ்.வி. முருகன், மாவட்டத் தலைவா் ரங்கசாமி, மாவட்ட துணைத் தலைவா் பெரியசாமி, மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் பொன். சக்திமோகன், மாவட்டச் செயலா் முருகேசன் உள்பட காங்கிரஸ் கட்சியினா் நூற்றுக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

ராஜபாளையம்

ராஜபாளையம் அருகே சேத்தூரில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில் மத்திய அரசை கண்டித்து செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலா் கணேசமூா்த்தி தலைமை வகித்தாா். இதில், பெட்ரோல், டீசல் விலை உயா்வை ரத்து செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

ஆா்ப்பாட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் லிங்கம், ஒன்றியச் செயலா் வீராச்சாமி, மாவட்டப் பொருளாளா் வழக்குரைஞா் பகத்சிங், ராஜா ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com