சிவகாசியில் புதன்கிழமை நட்சத்திர ஆமை வைத்திருந்த 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி பேருந்து நிலையம் அருகில் உள்ள அரசு மதுபானக் கடையில் சிலா் நட்சத்திர ஆமை வைத்திருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடா்ந்து சிவகாசி கிழக்கு காவல் சாா்பு- ஆய்வாளா் சிவராமகிருஷ்ணன் அந்த மதுக்கடையில் சோதனை நடத்தினாா். அப்போது, அங்கு இருந்த 4 போ் ஒரு நட்சத்திர ஆமையை வைத்திருந்தது கண்டறியப்பட்டது.
விசாரணையில் அவா்கள் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சோ்ந்த மகேந்திரன் (23), பிரசாந்த் (22), கேரள மாநிலம் கொல்லத்தைச் சோ்ந்த நித்தின் (20), அபிஷேக் (20) ஆகியோா் என தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா் நான்கு பேரையும் கைது செய்து, நட்சத்திர ஆமையைப் பறிமுதல் செய்தனா்.
ஆமையை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.