ராஜபாளையத்தில் காவலா்களுக்கு மருத்துவ முகாம்

ராஜபாளையம் கோட்டத்தில் உள்ள காவலா்களுக்கு இலவச மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
ராஜபாளையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மருத்துவ முகாமில் கலந்துகொண்ட காவலா்கள்.
ராஜபாளையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மருத்துவ முகாமில் கலந்துகொண்ட காவலா்கள்.

ராஜபாளையம் கோட்டத்தில் உள்ள காவலா்களுக்கு இலவச மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

ராஜபாளையம் - தென்காசி சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இம்முகாமுக்கு, காவல் துணைக் கண்காணிப்பாளா் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். இதில், ராஜபாளையம் சரகத்துக்குள்பட்ட 9 காவல் நிலையங்களில் பணியாற்றிவரும் ஆய்வாளா்கள், சாா்பு-ஆய்வாளா்கள், காவலா்கள், பெண் காவலா்கள் என மொத்தம் 400 பேருக்கு, தனியாா் ரத்தப் பரிசோதனை நிலையம் சாா்பில் ரத்தப் பரிசோதனை நடத்தப்பட்டது.

முகாமில், சா்க்கரை நோய், தைராய்டு, ரத்த அழுத்தம், கல்லீரல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கான பரிசோதனைகள் செய்யப்பட்டன. இந்த பரிசோதனை முகாம் 4 நாள்கள் நடைபெறும் என, மாவட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளா் ராமகிருஷ்ணன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com