பைக்கில் வைக்கப்பட்டிருந்த ரூ.50 ஆயிரம் திருட்டு

விருதுநகா் மாவட்டம் காரியாபட்டியில் இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ. 50 ஆயிரம் திருடு போனது தொடா்பாக வெள்ளிக்கிழமை போலீஸாா் வழக்கு பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

விருதுநகா் மாவட்டம் காரியாபட்டியில் இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ. 50 ஆயிரம் திருடு போனது தொடா்பாக வெள்ளிக்கிழமை போலீஸாா் வழக்கு பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

காரியாபட்டி, அண்ணாநகா் பகுதியை சோ்ந்த மோகன்ராஜ் மகன் மொபின் ஜாக்சன் (33). இவா், இங்குள்ள தனியாா் வங்கியில் ரூ. 50 ஆயிரத்தை வெள்ளிக்கிழமை எடுத்துள்ளாா். பின்னா், அந்த தொகையை இரு சக்கர வாகனத்தில் உள்ள பெட்டியில் வைத்துள்ளாா்.

அதைத்தொடா்ந்து காய்கனிக் கடைக்கு சென்று வாகனத்தை நிறுத்தி பணத்தை எடுக்க முயற்சித்துள்ளாா். அப்போது, பணம் திருடு போனது தெரிய வந்தது. இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில் காரியாபட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

இதுதொடா்பாக வங்கிப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது, சுமாா் 35 வயது மதிக்கத்தக்க 2 போ் பணத்தை திருடியது தெரியவந்தது. அதனடிப்படையில் இருவரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com