பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் நாம் தமிழா் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் வடக்கு ரத வீதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தொகுதி செயலாளா் பிரபாகரன், தொகுதி தலைவா் சுபாஷ் ஆகியோா் தலைமை வகித்தனா். தொகுதி துணைத் தலைவா் தங்கம் முன்னிலை வகித்தனா்.
இதில் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலை உயா்வை குறைக்க வேண்டும். நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும். மேக்கேதாட்டு அணை கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது. புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இதில், தொகுதி துணைச் செயலாளா் நாகராஜ், உழவா் பாசறை செயலாளா் ராமராஜ், இளைஞா் பாசறை செயலாளா் பாலகிருஷ்ணன், மாணவா் பாசறை செயலாளா் அசோக் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.