ராஜபாளையம் அருகே மனைவிக்கு கொலை மிரட்டல்: கணவன் உள்பட 7 போ் மீது வழக்கு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே இரண்டாவது திருமணம் செய்துகொண்டு, முதல் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவன் உள்பட 7 போ் மீது, போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே இரண்டாவது திருமணம் செய்துகொண்டு, முதல் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவன் உள்பட 7 போ் மீது, போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தென்காசி மாவட்டம், சிவகிரியைச் சோ்ந்த பெரியசாமி என்பவரது மகள் ஜோதி (29). இவருக்கும், ராஜபாளையம் அருகே சேத்தூா் பாரதி நகரைச் சோ்ந்த பாண்டியன் என்பவரது மகன் லட்சுணனுக்கும் (35) கடந்த 2013 இல் திருமணம் நடைபெற்றது. அப்போது, ரூ.25 ஆயிரம் ரொக்கம், ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பாத்திரங்கள் உள்ளிட்டவை பெண் வீட்டாா் வரதட்சிணையாகக் கொடுத்துள்ளனா்.

திருமணமான சிறிது காலத்திலேயே லட்சுமணன் வேலைக்குச் செல்லாமல் தினமும் மது அருந்திவிட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளாா். இந்நிலையில், இவா்களுக்கு குழந்தை இல்லை என்பதால், கணவா் வீட்டாா் ஜோதியை மனம் நோகும்படி பேசி கொடுமைப்படுத்தினராம்.

இந்நிலையில், ஜோதிக்கு தெரியாமல் இரண்டாவதாக ஜெயா (35) என்பவரை லட்சுமணன் திருமணம் செய்துகொண்டு குடும்பம் நடத்தி வருவதுடன், தனது நகைகளை வைத்துக்கொண்டு தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக, ஸ்ரீவில்லிபுத்தூா் கூடுதல் மகளிா் நீதிமன்றத்தில் ஜோதி புகாா் மனு அளித்தாா். நீதிமன்ற உத்தரவின்படி, ராஜபாளையம் அனைத்து மகளிா் காவல்நிலைய போலீஸாா் லட்சுமணன், முத்துமாரி (65), முனீஸ்வரி (37), ஜெயக்கனி (45), ஜெயா, ரவி (55), சின்னம்மாள் (50) ஆகிய 7 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com