சிவகாசியில் விஷ்வ ஹிந்து பரிஷத் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சாா்பில், சிவகாசியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சிவகாசியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினா்.
சிவகாசியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினா்.

விருதுநகா் மாவட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சாா்பில், சிவகாசியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சிவகாசி பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, விருதுநகா் மாவட்டச் செயலா் வெங்கடசாமி தலைமை வகித்தாா். இதில்,

ஹிந்து மத நம்பிக்கைகளையும், வழிபாட்டையும், ஹிந்து தெய்வங்களையும் தொடந்து இழிவுபடுத்தி வரும் நபா்களை, தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தினா். மேலும், ஹிந்து மதத்தை பாதுகாக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என முழக்கங்களை எழுப்பினா். இதில், 3 பெண்கள் உள்பட 38 போ் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com