சிவகாசி தெற்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சிவகாசி போஸ் காலனியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, அக்கட்சியின் ஒன்றியச் செயலா் சந்திரசேகரன் தலைமை வகித்தாா். கூட்டத்தில், ‘இல்லம் செல்வோம் உள்ளம் வெல்வோம்’ என்ற கட்சியின் திட்டத்தை சிறப்பாக நிறைவேற்ற வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
இதில், வழக்குறைஞா் பிரிவு மாவட்டச் செயலா் பாலசுப்பிரமணியன் உள்பட பலா் கலந்துகொண்டனா். முன்னதாக, மாவட்ட துணைத் தலைவா் தங்கராஜ் வரவேற்றாா். ரத்தினகுமாா் நன்றி கூறினாா்.