ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர மாணவ, மாணவியா் விண்ணபிக்கலாம் என, கல்லூரி முதல்வா் காமராஜ் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2021-22 ஆம் ஆண்டுக்கான பி.ஏ. தமிழ், பி.ஏ. ஆங்கிலம், பி.எஸ்சி. கணிதம், கணினி அறிவியல் மற்றும் வணிகவியல் ஆகிய துறைகளில் சேர விரும்பும் மாணவ, மாணவியா், இணையதள முகவரியில் விண்ணப்பங்களை பதிவு செய்துகொள்ளலாம் என, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.