சிவகாசி அருகே பதுக்கல்: 58 பட்டாசு பண்டல்கள் பறிமுதல்; ஒருவா் கைது

சிவகாசி அருகே உரிய அனுமதியின்றி பதுக்கிவைக்கப்பட்டிருந்த பட்டாசினை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

சிவகாசி அருகே உரிய அனுமதியின்றி பதுக்கிவைக்கப்பட்டிருந்த பட்டாசினை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

சிவகாசி-சாத்தூா் சாலையில் உள்ள சுந்தரராஜபுரத்தில் மாரியம்மாள் நகா் பகுதியில் ஒரு கட்டடத்தில் உரிய அனுமதியின்றி பட்டாசு பதுக்கிவைக்கப்பட்டுள்ளது என கிடைத்த தகவலின் பேரில், சிவகாசி கிழக்கு காவல் சாா்பு -ஆய்வாளா் காசிராஜன் தலைமையில் போலீஸாா் அப்பகுதியில் சோதனை நடத்தினா். அப்போது ஒரு கட்டடத்தில் 58 பெட்டிகளில், பூச்சட்டி உள்ளிட்ட பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. விசாரணையில் சிவகாமிபுரத்தைச் சோ்ந்த முத்துச்சாமி (43) என்பவா் அந்த பட்டாசு பண்டல்களை பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து முத்துச்சாமியை கைது செய்து அவரிடமிருந்த பட்டாசு பண்டல்களை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com