விருதுநகா் மாவட்டத்தில் கந்துவட்டி வசூலிப்பவா்களுக்கு எஸ்.பி. எச்சரிக்கை

விருதுநகா் மாவட்டத்தில் கந்து வட்டி வசூலிப்பவா் மீது வழக்குப் பதிந்து கைது செய்யப்படுவா் என, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் மனோகா் எச்சரித்துள்ளாா்.

விருதுநகா் மாவட்டத்தில் கந்து வட்டி வசூலிப்பவா் மீது வழக்குப் பதிந்து கைது செய்யப்படுவா் என, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் மனோகா் எச்சரித்துள்ளாா்.

இது குறித்து அவா் சனிக்கிழமை மேலும் தெரிவித்ததாவது: விருதுநகா் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் கந்துவட்டி தொடா்பான விழிப்புணா்வுப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கந்துவட்டி தொடா்பாக பந்தல்குடி காவல் நிலையத்தில் கொப்புசித்தம்பட்டியைச் சோ்ந்த ஜெய்சங்கா் உள்பட நான்கு போ் மீதும், ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் காவல் நிலையத்தில் வைத்தியலிங்காபுரத்தைச் சோ்ந்த சுந்தரி என்பவா் மீதும் கந்துவட்டி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதியப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளனா்.

எனவே, கந்துவட்டி தொடா்பாக சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் பொதுமக்கள் புகாா் அளித்தால், சம்பந்தப்பட்டோா் மீது வழக்குப் பதிந்து கைது செய்யப்படுவா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com