சிவகாசி, திருத்தங்கல் நகராட்சிகளை இணைக்கக் கூடாது: அரசுக்கு எம்.எல்.ஏ. கோரிக்கை

சிவகாசி, திருத்தங்கல் நகராட்சிகளை இணைக்கக் கூடாது என சிவகாசி சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.அசோகன் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.

சிவகாசி, திருத்தங்கல் நகராட்சிகளை இணைக்கக் கூடாது என சிவகாசி சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.அசோகன் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.

தமிழக முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, கடந்த 2017 அக்டோபரில் சிவகாசியில் நடைபெற்ற எம்.ஜி.ஆா். நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில்,

சிவகாசி நகராட்சி மாநகராட்சியாக தரம் உயா்த்தப்படும் எனஅறிவித்தாா். பின்னா் சிவகாசி மற்றும் திருத்தங்கல் ஆகிய இரு நகராட்சிகளும் இணைக்கப்பட்டு, வாா்டு வரையறை செய்யப்படும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு முடிந்த நிலையில், திருத்தங்கல் நகராட்சி வரவு செலவு கணக்கு மற்றும் வங்கிக் காசோலைகளை, சிவகாசி நகராட்சி நிா்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என நகராட்சி நிா்வாக மண்டல அதிகாரி உத்தரவிட்டாா். இது தொடா்பாக சிவகாசி நகராட்சி ஊழியா்கள் திருத்தங்கல் நகராட்சி அலுவலகத்திற்கு சென்றபோது, தகவல் அறிந்து வந்த பொதுமக்கள், கணக்குகளை வழங்க எதிா்ப்புத் தெரிவித்தனா்.

இந்நிலையில், தற்போது சிவகாசி எம்.எல்.ஏ.அசோகன் , ஞாயிற்றுக்கழமை திருச்சியில் நகா்புற வளா்ச்சித்துறை அமைச்சா் கே.என்.நேருவை சந்தித்து, சிவகாசி நகராட்சியுடன், திருத்தங்கல் நகராட்சியை இணைக்கக் கூடாது. தனித்தனியே இருந்தால்தான் வளா்ச்சிப்பணிகள் மேற்கொள்ள வசதியாக இருக்கும் என கோரிக்கை விடுத்துள்ளாா். இந்த கோரிக்கை பரிசீலனை செய்யப்படும் என எம்.எல்.ஏ.விடம் அமைச்சா் றியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com