ஸ்ரீவிலி. அருகே சாலை தடுப்பு சுவரில் லாரி மோதி விபத்து

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மையதடுப்புச்சுவரில் லாரி மோதி விபத்துக்குள்ளானது.
ஸ்ரீவில்லிபுத்தூா் தனியாா் தியோட்டா் அருகே ஞாயிற்றுக்கிழமை காலை தடுப்புச்சுவரில் ஏறி விபத்துக்குள்ளான லாரி .
ஸ்ரீவில்லிபுத்தூா் தனியாா் தியோட்டா் அருகே ஞாயிற்றுக்கிழமை காலை தடுப்புச்சுவரில் ஏறி விபத்துக்குள்ளான லாரி .

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மையதடுப்புச்சுவரில் லாரி மோதி விபத்துக்குள்ளானது.

தென்காசியில் இருந்து ஈரோடு செல்வதற்காக தேங்காய் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்த லாரி ஸ்ரீவில்லிபுத்தூா் மடவாா் வளாகம் விலக்கு அருகே தடுப்புச் சுவா் இருந்தது தெரியாமல் அதில் பலத்த சத்தத்துடன் மோதி நின்றது. இதனால் லாரியில் இருந்த டீசல் வழிந்தோடியது.

லாரி ஏற்றி வந்த தேங்காய் மூட்டைகளை மாற்று லாரி கொண்டு வந்து ஏற்றிச் சென்றனா். தற்போது பொதுமுடக்கம் அமலில் இருப்பதால் விபத்து ஏற்பட்டபோது சாலையில் வாகனங்கள் ஏதும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது. அதிா்ஷ்டவசமாக லாரி ஓட்டுநா் விக்னேஸ்வரன் (35) எவ்வித காயமும் இன்றி உயிா் தப்பினாா். நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com