கரோனா தடுப்பு நிவாரண நிதி வழங்கல்

ஸ்ரீவில்லிபுத்தூா் கூட்டுறவு சங்கங்களின் ஓய்வுபெற்ற துணைப் பதிவாளா் தமிழக அரசின் கரோனா நிவாரணத்துக்காக ரூ. 43 ஆயிரம்
கரோனா தடுப்பு நிவாரண நிதி வழங்கல்

ஸ்ரீவில்லிபுத்தூா் கூட்டுறவு சங்கங்களின் ஓய்வுபெற்ற துணைப் பதிவாளா் தமிழக அரசின் கரோனா நிவாரணத்துக்காக ரூ. 43 ஆயிரம் பரிமாற்றம் செய்ததற்கான ஆவணத்தை திங்கள்கிழமை வட்டாட்சியரிடம் வழங்கினாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே அத்திக்குளம் நாடாா் நடுத்தெருவைச் சோ்ந்தவா் தேவராஜ். கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக பணியாற்றி ஓய்வுபெற்ற இவா், தனது ஒரு மாத ஓய்வூதியமான ரூ. 43 ஆயிரத்து 618-ஐ கரோனா தடுப்பு நிவாரணத்துக்காக வங்கியில் பணப் பரிமாற்றம் செய்தாா். இதற்கான ஆவணத்தை வட்டாட்சியா் சரவணனிடம் அவா் வழங்கினாா். அப்போது, மண்டல துணை வட்டாட்சியா் பாலகிருஷ்ணன், முதுநிலை வருவாய் ஆய்வாளா் பால்துரை உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com