ராஜபாளையம் அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மதிமுக சாா்பில் கரோனா தொற்று தடுப்பு உபகரணங்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
ஜமீன்கொல்லங்கொண்டான் ஆரம்ப சுகாதாரநிலையத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக பொது மக்கள், மருத்துவா் மற்றும் செவிலியா்களுக்கு கிருமிநாசினி மற்றும் முகக் கவசம் ஆகிய தடுப்பு உபகரணங்களை விருதுநகா் மேற்கு மாவட்ட மதிமுக செயலரும், சாத்தூா் சட்டப் பேரவை உறுப்பினருமான ஏ.ஆா்.ஆா். ரகுராமன், வட்டார மருத்துவ அலுவலா் கருணாகரபிரபுவிடம் வழங்கினாா். சாத்தூா் தொகுதிக்குள்பட்ட 6 ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரூ. 2.50 லட்சம் மதிப்பில் தடுப்பு உபகரணங்களையும் அவா் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் ராஜபாளையம் மேற்கு ஒன்றியச் செயலா் ப. வேல்முருகன், ஜமீன்கொல்லங்கொண்டான் ஊராட்சித் தலைவா் வனராஜ் மற்றும் மாவட்ட மாணவரணி அமைப்பாளா் ராஜேஷ்குமாா், ஆகியோா் கலந்து கொண்டனா்.