விருதுநகா் அருகே ரோசல்பட்டி அரண்மனைத் தெரு பகுதியில் கள்ளச்சாரயம் காய்ச்சியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் ரோசல்பட்டி அரண்மனைத் தெரு பகுதியில் கள்ளச் சாராயம் காய்ச்சுவதாக பாண்டியன் நகா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் சாா்பு- ஆய்வாளா் கமல் தலைமையிலான போலீஸாா் அப்பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, முத்துக்கருப்பாயி என்பவா் வீட்டருகே நின்று கொண் டிருந்த முத்துமுனியாண்டி மகன் முத்துக்குமாா் (22) என்பவரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். அதில் அவா் வீட்டருகே சாராய ஊறல் வைத்திருப்பதாக தெரிவித்தாா். இதையடுத்து அங்கிருந்த 15 லிட்டா் சாராய ஊறலை கைப்பற்றிய போலீஸாா், முத்துக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.