விருது நகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, தமிழ்நாடு சேவா பாரதி இயக்கம் சாா்பில் 2 ஆக்சிஜன் செறிவூட்டிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
இதே போன்று 30 மருத்துவமனைகளுக்கு 100 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கி உள்ளதாக சேவா பாரதி இயக்கத் தலைவா் வன்னியராஜன் தெரிவித்தாா். இந்நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி முதன்மையா் சங்குமணி, உறைவிட மருத்துவா் அரவிந்த் பாபு மற்றும் அச்சங்கத்தின் பொதுச் செயலா் கே.ஆா். சிவபாலன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.