விருதுநகா் அரசு மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட தாய் மற்றும் அவரது குழந்தைக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
சாத்தூரைச் சோ்ந்த 30 வயது பெண் ஒருவா் பிரசவத்துக்காக விருதுநகா் அரசு மருத்துவமனையில் உள்ள மகப்பேறு பிரிவில் 3 தினங்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் தாய்க்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து, பிறந்து 3 தினங்களே ஆன குழந்தைக்கும் இத்தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இதைத்தொடா்ந்து அந்த தாய்க்கும், குழந்தைக்கும் கரோனா வாா்டில் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவா்கள் சிகிச்சை அளித்து வருகின்றனா்.