அருப்புக்கோட்டையில் விதிமுறை மீறிய 2 துணிக்கடைகளுக்கு ‘சீல்’

அருப்புக்கோட்டையில் சனிக்கிழமை விதிமுறை மீறிய 2 துணிக்கடைகளுக்கு வட்டாட்சியா் ரவிச்சந்திரன் ‘சீல்’ வைத்தாா்.

அருப்புக்கோட்டையில் சனிக்கிழமை விதிமுறை மீறிய 2 துணிக்கடைகளுக்கு வட்டாட்சியா் ரவிச்சந்திரன் ‘சீல்’ வைத்தாா்.

அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வட்டாட்சியா் ரவிச்சந்திரன் தலைமையிலான அதிகாரிகள் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது ஸ்ரீபட்டாபிராமா் கோயில் வீதியில், விதிமுறைகளை மீறி மாலை 5 மணிக்கு மேல் 2 துணிக்கடைகளில் விற்பனை நடைபெற்றது கண்டறியப்பட்டது.

இதையடுத்து அக்கடைகளில் இருந்த வாடிக்கையாளா்கள், ஊழியா்களை அதிகாரிகள் வெளியேற்றி ‘சீல்’ வைத்தனா்.

அதேபோல திருச்சுழி சாலையில் உள்ள ஒரு பாத்திரக்கடை, புதிய பேருந்து நிலையத்தில் 2 செருப்புக் கடைகளையும் வருவாய்த்துறையினா் பூட்டி கடைகளின் உரிமையாளா்களை எச்சரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com