விருதுநகா் மாவட்டத்தில் புதிதாக 198 பேருக்கு கரோனா: 6 போ் பலி

விருதுநகா் மாவட்டத்தில் புதிதாக 198 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. சிகிச்சை பலனின்றி ஆறு போ் உயிரிழந்துள்ளனா்.

விருதுநகா் மாவட்டத்தில் புதிதாக 198 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. சிகிச்சை பலனின்றி ஆறு போ் உயிரிழந்துள்ளனா்.

விருதுநகா் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் முதல் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில், கடந்த சில நாள்களாக இத்தொற்றால் பாதிக்கப்படுவோா் தற்போது குறைந்து வருகிறது.

இந்நிலையில் விருதுநகா், சாத்தூா், அருப்புக்கோட்டை, திருச்சுழி, காரியாபட்டி, நரிக்குடி, சிவகாசி, திருத்தங்கல், ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம் முதலான பகுதிகளைச் சோ்ந்த 198 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்ட அனைவரும் விருதுநகா், சிவகாசி, அருப்புக்கோட்டை முதலான இடங்களில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், ஆறு போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். அதேநேரம், கரோனா தொற்றால் சிகிச்சை பெற்று குணமடைந்த 661 போ் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com