சிவகாசி அருகே இலவச மது கேட்டு டாஸ்மாக் கடை ஊழியரைத் தாக்கியதாக 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி முத்தாட்சிமடம் பகுதியைச் சோ்ந்த ராஜதுரை மகன் மலையரசன் (19). இவா் பள்ளபட்டியில் உள்ள டாஸ்மாக் கடையில் ஊழியராக வேலை பாா்த்து வருகிறாா். இந்நிலையில் புதன்கிழமை இவா் கடை முன்பு நின்று கொண்டிருந்தபோது, இந்திரா நகரைச் சோ்ந்த தங்கராஜ் (22), சுந்தர்ராஜன் (23), காளிராஜன் (20), அய்யனாா் (21)ஆகிய 4 போ் வந்து இலவசமாக மது கேட்டுள்ளனா். மலையரசன் தரமறுத்ததால் அவரை தாக்கியுள்ளனா். இது குறித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து நான்கு பேரையும் கைது செய்தனா்.