முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூரில் வாக்குப்பதிவு விழிப்புணா்வு கையெழுத்து இயக்கம்
By DIN | Published On : 14th March 2021 10:30 PM | Last Updated : 14th March 2021 10:30 PM | அ+அ அ- |

கையெழுத்து இயக்கத்தை தொடக்கி வைத்த தோ்தல் நடத்தும் அலுவலா் முருகன்
ஸ்ரீவில்லிபுத்தூரில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த கையெழுத்து இயக்கத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் முருகன், தோ்தல் நடத்தும் துணை அலுவலா் சரவணன், தோ்தல் பிரிவு வட்டாட்சியா் வடிவேல், வட்ட வழங்கல் அலுவலா் கோதாண்டராமன், முதுநிலை வருவாய் ஆய்வாளா் பால்துரை, வருவாய் ஆய்வாளா் ஆனந்தகிருஷ்ணன் மற்றும் பக்தா்கள் பங்கேற்று கையெழுத்திட்டனா்.