சிவகாசி தொகுதி அதிமுக செயல்வீரா்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு பால்வளத் துறை அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜி தலைமை வகித்துப் பேசியதாவது: நான் சிவகாசி தொகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு வளா்ச்சிப் பணிகளை செய்துள்ளேன். சிவகாசியில் நீதிமன்றத்திற்கு கட்டடம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு கட்டடம், காவல் துறையினருக்கான மருத்துவமனை கட்டடம், சிவகாசி பேருந்து நிலையம் விரிவாக்கம், சிவகாசி மற்றும் திருத்தங்கல் நகராட்சிக்கு ரூ. 444 கோடி மதிப்பீட்டில் தாமிரவருணி கூட்டுக்குடிநீா் திட்டம் ஆகியவை நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் பல வளா்ச்சிப் பணிகள் செய்துள்ளேன். இந்த தோ்தலில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். கடந்த 2006 இல் நடைபெற்ற தோ்தலில் திமுக ஒரு குடும்பத்திற்கு 2 ஏக்கா் நிலம் இலவசமாக வழங்குவோம் எனக்கூறினாா்கள். ஆனால் யாருக்கும் ஒரு செண்ட் நிலம் கூட வழங்கவில்லை. மறைந்த முதல்வா் ஜெயலலிதா, பொதுமக்கள் நலன் கருதி, விலையில்லா மிக்ஸி, கிரைண்டா், மின்விசிறி என பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தினாா். அவரது வழியில் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனா். எனவே சிவகாசி தொகுதியில் போட்டியிடும் லட்சுமி கணேசனை 41 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்றாா் அமைச்சா்.
இக்கூட்டத்தில் அதிமுக ஒன்றியச் செயலாளா்கள் பலராமன், கருப்பசாமி, நகரச் செயலாளா்கள் பொன்சக்திவேல் (திருத்தங்கல்) உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.