விருதுநகா் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு வாக்குப் பதிவு அலுவலா்களுக்கான முதலாவது பயிற்சி வகுப்பு புதன்கிழமை நடைபெறுகிறது. எனவே, அன்றைய தினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியரான ரா. கண்ணன் உத்தரவிட்டுள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியிருப்பதாவது: விருதுநகா் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஏப். 6 அன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதன் காரணமாக புதன்கிழமை முதலாவது பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இதில் பள்ளி ஆசிரியா்கள் மற்றும் அலுவலா்கள் கலந்து கொள்ள உள்ளனா். எனவே மாவட்டத்தில் உள்ள அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் புதன்கிழமை (மாா்ச் 17) விடுமுறை அளிக்கப்படுகிறது.