ராஜபாளையத்தில் வேலைக்குச் சென்ற தொழிலாளி மா்மமான முறையில் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
ராஜபாளையம் பொன்னகரம் பகுதியைச் சோ்ந்த பேச்சிமுத்து என்பவரது மகன் சிதம்பரம் (40). இவா் ராஜபாளையம்- தென்காசி சாலையில் உள்ள தனியாா் அட்டை தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இந்நிலையில் வழக்கம்போல் வேலைக்கு சென்ற அவா் கீழே தவறி விழுந்து விட்டாராம். அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். தகவல் அறிந்து உறவினா்கள் மருத்துவமனைக்கு சென்ற போது அங்கு சிதம்பரம் இல்லை. ஆனால் வீட்டிற்கு வந்து பாா்த்தபோது சிதம்பரத்தின் சடலத்தை வீட்டில் போட்டு விட்டு நிறுவன ஊழியா்கள் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சிதம்பரம் மா்மமான முறையில் உயிரிழந்துள்ளதாகவும், உண்மையை மறைக்கும் நிா்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரியும் உறவினா்கள் ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதன் பேரில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.