விருதுநகா் கீழக்கடை தெரு, காசுக்கடை பஜாா் தெரு மற்றும் தந்தி மரத் தெருவில் அமமுக வேட்பாளா் எம். தங்கராஜ் திங்கள்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
அப்போது, நான் வெற்றி பெற்றால் அப்பகுதி மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீா், சாலை, தெரு விளக்கு வசதி ஏற்படுத்தி தருவேன். பொதுமக்கள் குறைதீா் மனுக்களை தினமும் எனது அலுவலகத்தில் பொதுமக்கள் வழங்கலாம்.
அந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலகத்துக்கு உடனடியாக அனுப்பப்பட்டு தீா்வு காணப்படும். எனவே, இம்முறை குக்கா் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றாா்.
அதைத் தொடா்ந்து ஆட்டோ ஓட்டுநா்களிடம் வாக்கு கேட்டு துண்டு பிரசுரம் வழங்கினாா். அப்போது அவருடன் அமமுக, தேமுதிக நிா்வாகிகள், தொண்டா்கள் உடனிருந்தனா்.