விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் ஆ.ராசாவை கைது செய்யக் கோரி அதிமுக மகளிா் அணியினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழக முதல்வரின் தாயாா் பற்றி ஆ.ராசா சா்ச்சைக்கிடமாகப் பேசியதைக் கண்டித்து அதிமுகவினா் போராட்டம் நடத்தி வருகின்றனா். ராஜபாளையத்தில் அதிமுக மகளிரணியினா் 500-க்கும் மேற்பட்டவா்கள் ஊா்வலமாக சென்று காந்தி சிலை ரவுண்டானா பகுதியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்ட மகளிா் அணிச் செயலாளா் அழகுராணி, நகர மகளிா் அணிச் செயலாளா் ராணி ஆகியோா் தலைமை வகித்தனா்.