விருதுநகரில் உள்ள தேவலாயங்களில் குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு குருத்தோலை பவனியும் சிறப்புத் திருப்பலியும் நடைபெற்றது.
விருதுநகா் தூய இன்னாசியாா் ஆலயத்தில் விருதுநகா் மறை மாவட்ட அதிபரும், ஆலய பாதிரியாருமான அம்புரோஸ் ராஜ், துணை பாதிரியாா் சந்தியாகப்பன் தலைமையில் குருத்தோலைகளை கைகளில் ஏந்தியவாறு ஊா்வலமாகச் சென்றனா். நகராட்சி அலுவலகம், அருப்புக்கோட்டை மேம்பாலம், எம்ஜிஆா் சிலை வழியாக ஊா்வலம் மீண்டும் ஆலயத்தை அடைந்தது. அதைத் தொடா்ந்து சிறப்புத் திருப்பலி மற்றும் மறையுரை நடைபெற்றது.
அதேபோல், விருதுநகா் பாண்டியன் நகா் தூய சவேரியாா் ஆலயத்தில் பாதிரியாா் ஸ்டீபன் சேவியா் தலைமையில் குருத்தோலை பவனி நடைபெற்றது. அண்ணாநகா் தூய அந்தோணியாா் ஆலயம் மற்றும் விருதுநகா் நிறைவாழ்வு நகா் ஆலயம் ஆகிய இடங்களிலும் குருத்தோலை பவனி நடைபெற்றது. தொடா்ந்து சிறப்புத் திருப்புலி மற்றும் மறையுரை நடைபெற்றது. ஆா்ஆா். நகா் தூய வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை ஆலயத்திலிருந்து பாதிரியாா் அலெக்ஸ் ஞானராஜ் தலைமையில் குருத்தோலை பவனி நடைபெற்றது.