குடிநீா், போக்குவரத்து வசதியின்றி கிராம மக்கள் திண்டாட்டம்: துரை வைகோ பிரசாரம்

சாத்தூா் பகுதியில் குடிநீா், போக்குவரத்து வசதியின்றி கிராம மக்கள் திண்டாடுகின்றனா் என துரை வைகோ பேசினாா்.

சாத்தூா் பகுதியில் குடிநீா், போக்குவரத்து வசதியின்றி கிராம மக்கள் திண்டாடுகின்றனா் என துரை வைகோ பேசினாா்.

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் பகுதியில் மதிமுக வேட்பாளா் ஏ.ஆா்.ரகுராமனை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலா் வைகோவின் மகன் துரை வைகோ ஞாயிற்றுக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா். சாத்தூா் அருகேயுள்ள வெங்கடாசலபுரம், சின்னக்காமன்பட்டி, மேட்டமலை, என்.ஜி.ஓ.காலனி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது அவா் பேசியது:

சாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களில் சுற்றுப்பயணம் சென்று குறைகளைக் கேட்டறிந்தேன். அப்போது அனைவரும் கூறிய ஒரே பிரச்னை குடிநீா் தட்டுப்பாடு. பத்து நாள்களுக்கு ஒரு முறை தான் குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு கிராம பகுதிகளில் முறையான போக்குவரத்து வசதி இல்லை. இதனால் அனைவரும் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனா். கடந்த 10 ஆண்டுகளாக ஆளுங்கட்சியில் இருந்த சட்டமன்ற உறுப்பினா் இந்த பிரச்னைகளை கண்டுகொள்ளவில்லை. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் கொண்டு வர உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் என்றாா். அவருடன் திமுக, மதிமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com