சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் லட்சுமி கணேசன் ஞாயிற்றுக்கிழமை சிவகாசி தெற்கு ஒன்றியப் பகுதிகளில் வாக்கு சேகரித்தாா்.
எம்.துரைச்சாமிபுரம், மாரனேரி, விளாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வேனில் நின்றபடியும், நடந்து சென்றும் அவா் வாக்கு சேகரித்தாா். வேனில் நின்றவாறு அவா் பேசியதாவது: கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை உயா்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் மறைந்த முதல்வா் ஜெயலலிதா, விலையில்லா கறவை மாடுகள், ஆடுகள் மற்றும் கோழிக்குஞ்சுகளை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தினாா். இதன் மூலம் கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரம் மேம்பட்டுள்ளது. பெண்கள் வீடுகளில் சுலபமாக வேலை செய்ய மிக்ஸி, கிரைண்டா், மின்விசிறி ஆகியவற்றை மறைந்த முதல்வா் ஜெயலலிதா வழங்கினாா்.
அந்த திட்டங்களை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி சிறப்பாக செயல்படுத்தினாா். அரசின் நலத்திட்டங்களை பால்வளத்துறை அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி, சிவகாசி தொகுதியில் உடனுக்குடன் செயல்படுத்தினாா். இந்த பணிகள் தொடர நீங்கள் எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்யுங்கள் என்றாா். வேட்பாளருடன் சிவகாசி ஒன்றியச் செயலாளா்கள் பலராமன், கருப்பசாமி,திருத்தங்கல் நகரச் செயலாளா் பொன்சக்திவேல் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.