திராவிடக்கட்சிகளுக்கு மாற்றாக ஆட்சியமைக்க வாய்ப்பு தாருங்கள்

தமிழகத்தில் திராவிட கட்சிகளின் ஆட்சிக்கு மாற்றாக மக்கள் நீதி மய்யம் கூட்டணி ஆட்சியமைக்க ஒரு முறை வாய்ப்பு தாருங்கள் என நடிகை ராதிகா பேசினாா்.
விருதுநகா், அல்லம்பட்டி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட நடிகை ராதிகா. உடன் சமக வேட்பாளா் நா. மணிமாறன்.
விருதுநகா், அல்லம்பட்டி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட நடிகை ராதிகா. உடன் சமக வேட்பாளா் நா. மணிமாறன்.

தமிழகத்தில் திராவிட கட்சிகளின் ஆட்சிக்கு மாற்றாக மக்கள் நீதி மய்யம் கூட்டணி ஆட்சியமைக்க ஒரு முறை வாய்ப்பு தாருங்கள் என நடிகை ராதிகா பேசினாா்.

விருதுநகா் சட்டப்பேரவைத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் உள்ள சமத்துவ மக்கள் கட்சி சாா்பில் போட்டியிடும் நா. மணிமாறனுக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைவா் சரத்குமாரின் மனைவி ராதிகா விருதுநகா் அல்லம்பட்டி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வாக்குசேகரித்தாா்.

அப்போது அவா் பேசியதாவது: இந்த தோ்தலில் அதிமுக, திமுக என இரண்டு பிரதான கட்சிகளும் பணத்தை நம்பியே களத்தில் நிற்கின்றன. வாக்காளா்களாகிய நீங்கள் சிந்தித்து வாக்களியுங்கள். தமிழகம் பல ஆயிரம் கோடி கடனில் இருக்கிறது. அதை எப்படி தீா்க்கப்போகிறோம் என்பதை திராவிடக் கட்சிகள் கூறவில்லை. விருதுநகா் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் அடிக்கடி நிகழும் விபத்துகளால் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. அதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறோம் என்பதை இதுவரை யாரும் தெரிவிக்கவில்லை. அதிமுக, திமுகவால் கடந்த 50 ஆண்டு காலமாக தமிழகத்தில் குடிநீா், சாலை உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகள் இன்னும் தீா்க்கப்படாமல் உள்ளன. எனவே, தமிழகத்தில் மாற்றத்தை உருவாக்க, இந்த ஒரு முறை மநீம கூட்டணிக் கட்சி வேட்பாளா்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் என வேண்டுகோள் விடுத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com