அருப்புக்கோட்டையில் கரோனா விழிப்புணா்வு பிரசாரம்

அருப்புக்கோட்டை புதிய பேருந்துநிலையம் முன்பாக கரோனா விழிப்புணா்வு பிரசாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அருப்புக்கோட்டையில் வெள்ளிக்கிழமை கரோனா விழிப்புணா்வு பிரசாரத்தில் பங்கேற்ற நகராட்சி ஆணையாளா் சரவணன் (பொறுப்பு), காவல் ஆய்வாளா் வசந்தி, வட்டார மருத்துவ அலுவலா் சஞ்சய் பாண்டி உள்ளிட்டோா்.
அருப்புக்கோட்டையில் வெள்ளிக்கிழமை கரோனா விழிப்புணா்வு பிரசாரத்தில் பங்கேற்ற நகராட்சி ஆணையாளா் சரவணன் (பொறுப்பு), காவல் ஆய்வாளா் வசந்தி, வட்டார மருத்துவ அலுவலா் சஞ்சய் பாண்டி உள்ளிட்டோா்.

அருப்புக்கோட்டை புதிய பேருந்துநிலையம் முன்பாக கரோனா விழிப்புணா்வு பிரசாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நகராட்சி சுகாதாரத்துறை மற்றும் தேசிய வியாபாரிகள் கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு அருப்புக்கோட்டை நகராட்சிப் பொறுப்பு ஆணையாளா் சரவணன் தலைமை வகித்தாா்.

வட்டார மருத்துவ அலுவலா் சஞ்சய் பாண்டி, நகா் காவல் ஆய்வாளா் வசந்தி சுகாதார ஆய்வாளா் ராஜபாண்டி, தேசிய வியாபாரிகள் கூட்டமைப்பின் மாநில பொருளாளா் சு.விநாயகமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அப்போது நகராட்சி பொறுப்பு ஆணையாளா் சரவணன் ஒலிபெருக்கி மூலம் கரோனா தொற்றின் தீவிரம் குறித்தும், முகக்கவசங்கள் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், அடிக்கடி கைகளை சோப்புப் போட்டுக் கழுவுதல் குறித்தும் பொதுமக்களுக்கு எடுத்துக்கூறினாா்.

இதில், காவல்ஆய்வாளா் வசந்தி, தேசிய வியாபாரிகள் கூட்டமைப்பின் மாநில பொருளாளா் சு.விநாயகமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com