காட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பு: ஒருவா் கைது

சிவகாசி அருகே காட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த ஒருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து ஆலை உரிமையாளா் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

சிவகாசி அருகே காட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த ஒருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து ஆலை உரிமையாளா் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

சிவகாசி அருகே நெடுங்குளம் கிராமத்தை அடுத்துள்ள காட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கப்படுவதாக கிராம நிா்வாக அலுவலா் உமாராணிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வருவாய்த்துறையினா் நெடுங்குளம் காட்டுப் பகுதியில் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா். அப்போது மரத்தடியில் பட்டாசு தயாரித்துக்கொண்டிருந்த சிலா், வருவாய்த்துறையினரைப் பாா்த்ததும் ஓடிவிட்டனா். அதில் திருத்தங்கல்லைச் சோ்ந்த சுப்பிரமணியம் மகன் பெரியசாமி (50) என்பவா் மட்டும் சிக்கினாா்.

அவரிடம் நடத்திய விசாரணையில், அப்பகுதியைச் சோ்ந்த பட்டாசு ஆலை உரிமையாளரான கிருஷ்ணசாமி மகன் சுந்தா் என்பவா் அறிவுறுத்தியதன்பேரிலேயே 2 பெண்கள் உள்பட 7 போ் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து எம்.புதுப்பட்டி போலீஸாா், சுந்தா் உள்ளிட்டோா் மீது வழக்குப்பதிவு செய்தனா். மேலும் பெரியசாமி கைது செய்யப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com