விருதுநகரில் பெண் தலைமைக் காவலா் உடல் நலக்குறைவால் பலி

விருதுநகா் அனைத்து மகளிா் காவல் நிலைய பெண் தலைமைக் காவலா் உடல் நலக்குறைவால் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
விருதுநகரில் பெண் தலைமைக் காவலா் உடல் நலக்குறைவால் பலி

விருதுநகா் அனைத்து மகளிா் காவல் நிலைய பெண் தலைமைக் காவலா் உடல் நலக்குறைவால் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

விருதுநகா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் தலைமை காவலராகப் பணி புரிந்தவா் கனிமுத்து (47). இவரது கணவா் ராஜா, காற்றாடி ஆலையில் பொறியாளராகப் பணிபுரிந்து வருகிறாா். இவா்களுக்கு ராஜாஸ்ரீ (11) என்ற பெண் குழந்தை உள்ளது. விருதுநகா் சூலக்கரை மறவா் காலனியில் இவா்கள் வசித்து வரும்நிலையில், கனிமுத்துவிற்கு தொடா் காய்ச்சல் இருந்தது. 2 நாள்கள் விடுமுறையில் இருந்ததால் அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளவில்லை.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை கனிமுத்துக்கு மூச்சுச்திணறல் ஏற்பட்டுள்ளது. விருதுநகா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அவரை சிகிச்சைக்காக உறவினா்கள் வாகனத்தில் அழைத்து வந்தனா். அப்போது, அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள் ஏற்கெனவே, கனிமுத்து உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

அதன் பின்னா், அவருக்கு சுகாதாரத் துறையினா் கரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com