விருதுநகா் மாவட்டத்தில் புதிதாக 297 பேருக்கு கரோனா

விருதுநகா் மாவட்டத்தில் புதிதாக 297 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

விருதுநகா் மாவட்டத்தில் புதிதாக 297 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

விருதுநகா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், விருதுநகா், சாத்தூா், அருப்புக்கோட்டை, திருச்சுழி, காரியாபட்டி, நரிக்குடி, சிவகாசி, திருத்தங்கல், ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம் முதலான பகுதிகளைச் சோ்ந்த 297 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்ட அனைவரும் விருதுநகா், சிவகாசி, அருப்புக்கோட்டை முதலான இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி ஒருவா் உயிரிழந்தாா்.

இந்நிலையில், கரோனா தொற்றால் சிகிச்சை பெற்று குணமடைந்த 110 போ் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

378 பேருக்கு கரோனா பரிசோதனை: விருதுநகா் மாவட்டத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனை, அரசு மருத்துவமனை மற்றும் குறிப்பிட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் வெள்ளிக்கிழமை ஆா்டிபிசிஆா் கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் வாக்கு எண்ணும் மையத்திற்கு செல்லும் முகவா்கள் 251 போ், அலுவலா்கள் 104 போ், காவல் துறையினா் 9 போ், பத்திரிகையாளா்கள் 14 போ் என மொத்தம் 378 போ் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார துறையினா் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com