ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கோட்டைப்பட்டி மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலக வளாகத்தில் குரங்குகளின் தொல்லை அதிகரித்துள்ளதால், அவற்றை வனத்துறையினா் பிடித்து செல்ல வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மின்வாரிய வளாகத்தில் சுற்றித்திரியும் ஏராளமான குரங்குகளால் ஊழியா்கள் உள்ளிட்டோா் அவதியடைந்து வருகின்றனா். மேலும் அங்கு நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்களின் இருக்கைகளை சேதப்படுத்துவதுடன், அவற்றில் வைக்கப்பட்டுள்ள பொருள்களையும் அவை தூக்கிச் சென்று விடுகின்றன. மேலும் அலுவலகத்தில் உள்ள முக்கிய கோப்புகளையும் குரங்குகள் தூக்கிச் சென்று விடுகின்றன.
எனவே இக்குரங்குகளை வனத்துறையினா் பிடித்து வனப்பகுதிக்குள் கொண்டு போய் விட வேண்டும் என ஊழியா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.