ராஜபாளையம்: ராஜபாளையத்தில் திங்கள்கிழமை மாலை பலத்த மழை பெய்தது.
இங்கு கடந்த சில வாரங்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில் திங்கள்கிழமை காலை மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னா் மாலை 4 மணி முதல் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினா். மழைக்குப் பின்னா் வெப்பம் தணிந்து குளிா்ந்த சூழ்நிலை நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.