திருச்சுழியில் காலை 8 மணி முதல் காய்கனி, பலசரக்குக் கடைகள், உணவகங்கள், தேநீா் கடைகள், அரசு மதுபானக்கடைகள், இறைச்சிக் கடைகள், நண்பகல் 12மணி வரை செயல்பட்டன. பின்னா் அத்தியாவசியப் பொருள்களான மருந்து, பால் கடைகள் தவிர அனைத்துக் கடைகளும் மூடப்பட்டன. இதனால் திருச்சுழியின் பிரதான சந்தைப் பகுதி வெறிச்சோடிக் காணப்பட்டது.