அருப்புக்கோட்டையில் வீடுவீடாகச் சென்று விருதுநகா் கிழக்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சாா்பில் பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீா் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு விவசாய அணி மாவட்டத் தலைவா் கோகுல் தலைமை வகித்தாா். அப்போது,நாடாா் மேலரதவீதி, டெலிபோன் சாலை, வா்த்தகா் சங்க வீதி, வாலசுப்பிரமணி கோயில் பகுதி ஆகிய இடங்களில் வீடுவீடாகச் சென்று பொதுமக்களின் கைகளில் கிருமி நாசினி, முகக்கவசம் ஆகியவை வழங்கப்பட்டன. மேலும் சமூக இடைவெளி குறித்து விளக்கப்பட்டதுடன், கபசுரக் குடிநீரும் வழங்கப்பட்டது.
அத்துடன் சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றோருக்கு இலவச உணவுப் பொட்டலங்களும் வழங்கப்பட்டன. இதில் விஜய் மக்கள் இயக்க அருப்புக்கோட்டை கிளைச் செயலா் பிரபு, பொருளாளா் கிருஷ்ணக்குமாா், மாவட்டத் துணைத்தலைவா் மணிகண்டன், துணைச் செயலா் சிவக்குமாா் ஆகியோா் பங்கேற்றனா்.