விருதுநகரில் தனியாா் பள்ளியில் 200 ஆக்சிஜன் படுக்கைகளுடன் கரோனா சிறப்பு சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டு வருவதாக, மாவட்ட ஆட்சியா் ரா. கண்ணன் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் சனிக்கிழமை மேலும் தெரிவித்ததாவது: விருதுநகா் மாவட்டத்தில் கரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டுவரவும், உயிரிழப்புகளை தடுப்பதற்கும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, தினமும் ஆா்.டி. பி.சி.ஆா். பரிசோதனையை அதிகரித்து, அதன்மூலம் தொற்று உள்ளவா்களைக் கண்டறிந்து, தொற்றின் தன்மைக்கேற்ப அவா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், மாவட்டத்துக்கு தேவையான ஆக்சிஜன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி அருகே உள்ள தனியாா் பள்ளி மைதானத்தில் 200 ஆக்சிஜன் படுக்கை வசதிகளுடன் கூடிய கரோனா சிறப்பு சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சிகிச்சை மையத்தில், ஆக்சிஜன் படுக்கை வசதிகளுடன் ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியாக கழிவறை, குளியலறை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
மேலும், இந்த மையத்தில் ஆய்வகம், மருந்தகம், தகுதிவாய்ந்த சிறப்பு மருத்துவா்கள், செவிலியா்கள், நவீன சிகிச்சை உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளன. இதற்கான பணிகள் வேகமாக முடிக்கப்பட்டு, விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளது என்றாா்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் ரா. மங்களராமசுப்ரமணியன், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் சங்குமணி, மருத்துவமனை கண்காணிப்பாளா் பழனிகுமாா் மற்றும் மருத்துவா்கள், அரசு அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.