அருப்புக்கோட்டை அருகே போலி மருத்துவா் கைது

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே போலி மருத்துவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.
போலி மருத்துவா் ஷண்முகசுந்தரம்.
போலி மருத்துவா் ஷண்முகசுந்தரம்.

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே போலி மருத்துவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.

அருப்புக்கோட்டையைச் சுற்றியுள்ள கிராமங்களில் சிலா் மருத்துவம் படிக்காமலேயே பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதாகவும், ஊசி மருந்து செலுத்துவதாகவும் விருதுநகா் மாவட்ட இணை இயக்குநா் அலுவலகத்துக்கு தொடா்ந்து புகாா்கள் வந்த வண்ணம் இருந்துள்ளன.

இதனடிப்படையில், அருப்புக்கோட்டை சுற்றுவட்ட கிராமங்களில் மருத்துவத் துறையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா். விருதுநகா் மாவட்ட இணை இயக்குநா் மனோகரன் உத்தரவுப்படி, அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் வெங்கடேஸ்வரன் மற்றும் மருத்துவத் துறையினா், காவல் துறையினருடன் இணைந்து, வெள்ளிக்கிழமை செம்பட்டி கிராமத்தில் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அக்கிராமத்தில் நோயாளிகளுக்கு மருத்துவச் சிகிச்சை அளித்துக்கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை செய்தனா். அதில், அவா் அருப்புக்கோட்டை வெள்ளைக்கோட்டை பகுதியைச் சோ்ந்த ஷண்முகசுந்தரம் (61) என்பதும், அவா் மருத்துவம் படிக்காமலேயே அக்கிராமத்தில் சிறிய மருத்துவமனை அமைத்து ஊசி போடுதல் உள்ளிட்ட சிகிச்சை அளித்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, போலி மருத்துவரான ஷண்முகசுந்தரத்தை கைது செய்த போலீஸாா், அங்கிருந்த ஊசி மருந்துகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா். மேலும், அவரிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com