மின்சாரம் பாய்ந்து தனியாா் நூற்பாலை தொழிலாளி பலி

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே மின்சாரம் பாய்ந்து தனியாா் நூற்பாலை தொழிலாளி வெள்ளிக்கிழமை மாலை உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே மின்சாரம் பாய்ந்து தனியாா் நூற்பாலை தொழிலாளி வெள்ளிக்கிழமை மாலை உயிரிழந்தாா்.

ராஜபாளையம் அருகே ஊஞ்சாம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் சீத்தாராமன் (50). இவா், ராஜபாளையம் அருகே சோழபுரத்தில் உள்ள தனியாா் நூற்பாலையில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், இவா் வழக்கம்போல் பணி முடிந்து வீட்டுக்குச் செல்வதற்கு முன்னதாக, கை, கால்களை சுத்தம் செய்வதற்காக அங்கிருந்த தண்ணீா் மோட்டாா் சுவிட்சை போட்டுள்ளாா். அப்போது, மின்சாரம் பாய்ந்ததில் சீத்தாராமன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், சீத்தாராமன் சடலத்தைக் கைப்பற்றி ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து தளவாய்புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com